சொல்நயத்தாலும் பொருள்நயத்தாலும் எனக்குப் பிடித்த கம்பராமாயணப் பாக்களில் இதுவும் ஒன்று. இராம-இராவண யுத்தம் முடிந்துபட்டது. போர்க்களத்தில் உயிர்துறந்து கிடக்கிறான் இராவணன். வீழ்ந்துபட்ட அவனது முகப்பொலிவை வருணிக்கிறார் கம்பர். அத்தோடு அதற்கான காரணங்களையும் அழகுற அடுக்குகிறார்.
இராவணனிடம் இதுவரையிலும் அடங்காமலிருந்த பல விடயங்கள் அடங்கியதால் வந்த முகப்பொலிவு என்கிறார்.
"வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க,
மனம் அடங்க, வினையம் வீய,இராவணனிடம் இதுவரையிலும் அடங்காமலிருந்த பல விடயங்கள் அடங்கியதால் வந்த முகப்பொலிவு என்கிறார்.
"வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க,
தெவ் மடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க,
மயல் அடங்க, ஆற்றல் தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா,
நிலை அடங்கச் சாய்த்த நாளின்,
மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான்
உயிர் துறந்த முகங்கள் அம்மா!"
கொடிய சிங்கத்தின் சினம் போன்ற இராவணனின் கோபம் அடங்கியதால், எதற்கும் அடங்காத ஒரு மனம் அடங்கியதால், வஞ்சகம் அடங்கியதால், பகையுணர்வு அடங்கியதால், கைகளின் போர்ச் செயல் அடங்கியதால், சீதை மேல் கொண்ட மையல் அடங்கியதால், பிறரை அச்சுறுத்தும் ஆற்றல் அடங்கியதால், முன்பு தம்மை அடக்கிய முனிவர்களையும் கூட தனது கடுந்தவத்தால் தலை தாழ்த்தி நிலையடங்கச் செய்த நாளை விடவும், இன்று இராவணனின் முகங்கள் மும்மடங்கு பொலிவு பெற்று விளங்குகின்றன என்கிறான் கம்பன்.
- யுவபாரதி
No comments:
Post a Comment