January 22, 2012

காஞ்சி இலக்கியக் களம் நடத்திய க.நா.சு. நூற்றாண்டு கருத்தரங்கம் - ஒலிப்பதிவு

காஞ்சிபுரம் இலக்கியக் களம் சார்பில் 22/01/2010 ஞாயிறன்று காஞ்சிபுரம் பூமாலை வளாகத்தில் "க.நா.சுப்பிரமண்யம் நூற்றாண்டு கருத்தரங்கம்" நடைபெற்றது. காஞ்சி சு.சிவசங்கர் தலைமையேற்று நடத்திய இந்நிகழ்விற்கு வந்தவர்களை எஸ்.உஷாராணி வரவேற்றார். எழுத்தாளர் செந்தூரம் ஜெகதீஷ் "க.நா.சு. ஒரு இலக்கியப் பார்வை" என்ற தலைப்பிலும், எழுத்தாளர் சூர்யராஜன் "க.நா.சு. ஒரு இலக்கிய ஆளுமை" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். கே.உதயகுமார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தம் மற்றும் கவிஞர் அமுதகீதன் ஆகியோர் செய்திருந்தனர்.

ஒலிப்பதிவு : யுவபாரதி


No comments: