December 09, 2012

அம்பேத்கர் நினைவு நாள் அரங்கக் கூட்டம் : ஒலிப்பதிவு


கடந்த டிசம்பர் 8 சனிக்கிழமை மாலை  சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் “நந்தன் முதல் நத்தம் வரை : தொடரும் ஆதிக்கச் சாதியின் தீ நாக்குகள்” எனும் தலைப்பில் அம்பேத்கர் நினைவு நாள் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மக்கள் கட்சியின் சென்னை மாவட்டக் கிளை இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அக்கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் அருண்சோரி இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த இசையரசு சாதி எதிர்ப்புப் பாடல்கள் பாடினார். எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், பேரா.அ.மார்க்ஸ், தமிழ்நாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வி, எஸ்டிபிஐ அமைப்பின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜாகிர் உசைன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன், சிபிஐ (எம்எல்) மக்கள் விடுதலைக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தங்க தமிழ்வேலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இசையரசுவின் பாடல்களையும், தோழர்கள் ஸ்டாலின் ராஜாங்கம், அ.மார்க்ஸ், செல்வி ஆகியோரது உரைகளையும் கீழ்க்காணும் இணைப்புகளில் கேட்கலாம்.







ஒலிப்பதிவு : யுவபாரதி


(பி.கு.: வேறொரு நிகழ்வில் பங்கேற்கச் செல்ல நேர்ந்ததால், பிறரது உரைகளைப் பதிவு செய்ய இயலவில்லை.)

No comments: