March 26, 2013

அதுவும் உண்ணாவிரதம்... இதுவும் உண்ணாவிரதம்...


காலை 9 மணிக்கு இருவர் கைப்பிடிக்க நடந்து வருகிறார். உறுதியாக நின்று உண்ணாவிரதப் பந்தல் முகப்பில் வைக்கப்பட்டிருந்த பாலச்சந்திரன் படத்திற்கு மாலை அணிவிக்கிறார். பின் தமக்கென ஒதுக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் இருக்கையில் அமர்கிறார். அவர் 92 வயதான ஒரு மூதாட்டி. மாலை 5 மணி வரை இடம் விட்டு கொஞ்சமும் எழாமல் உண்ணாவிரதம் இருக்கிறார். பெயர் மாரியம்மாள். ஊர் நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டி. வைகோவின் தாயார். 

இந்தச் செய்தியை வாசிக்கும் போதே இன்னொன்று நினைவுக்கு வருகிறது. 86 வயது முதியவர் அவர். சென்னை கடற்கரை அண்ணா சமாதியருகில். அல்லது சமாதியாகி விட்ட அண்ணா அருகில். உயர்தர படுக்கை. சுற்றிலும் ஏர்கூலர்கள். பெரிய மின்விசிறிகள். தலைமாட்டிலும் கால்மாட்டிலுமாக வாழ்க்கைத் துணைகள். சுற்றிலும் பிள்ளைகள், பேரன்கள், கட்சி முக்கியஸ்தர்கள். சுமார் நான்கு மணி நேரம் இருந்துவிட்டு, வெற்றி வெற்றி என ஒரு பிரசங்கம். 

நம்மூரில் அதுவும் உண்ணாவிரதம்... இதுவும் உண்ணாவிரதம்...

No comments: