January 20, 2017

தேட்டம்


வெறிச்சோடிய தெருவில் நாய்
விடாமல் குரைத்துக் கொண்டிருக்கிறது
மண்ணள்ளி விசிறி
காலுதைத்துத் தேம்புகிறது குழந்தை
நகரமறுத்துக் கால்தேயவிட்ட ஆடு
தலைக்கயிறு பற்றி இழுபட்டுப்போகிறது
யாரும் கேட்காத மொழியை
சைகையோடு எழுதிக் காட்டுகிறான்
பித்தன்
காணாமல் போன என்னைத் தேடி
வெகுதூரம் வந்துவிட்டேன்.

18.01.2017

No comments: