February 16, 2010

மாற்றாந்தாய்



பொய் சொல்லக்கூடாது
உண்மையும்
சொல்ல முடியாதது


தாளாது நாப்படும் சொற்களை
மவுனத்தால் துச்சம் செய்கிறாய்
வதைப்பாட்டின் ஈன முனகலையும்
நாராசமெனச் செவி மறுத்து
ஆயுதம் செருகுகிறாய்


வாய்த்தனவின் எளிமையோடே
உவகை பூக்கிற ஆன்மாவை
எண்திசை இழுக்க நீளுமுன்
எதிர்பார்ப்பின் ஆழிப் பேரலைகள்
சுழற்றி

எறிகின்றன
வினாச் செடிகள் வேர்விட மறுக்கும்
அதிகாரத்தின் ஆலநிழலில்
கனா வித்துக்கள் புதைந்திருக்கின்றன.

No comments: