நகக் கண்ணில் கரிபூச
உள்ளங்கைகள் பிச்சையெடுத்தன
தொப்பூழ்க் கொடி அறுபட்ட
உதிரத் தடாகத்தில்
உறவுச் சாம்பல் நிரவி
அரியாசனம் நிலைபெற்றாயிற்று
இதயம் வீசி எறியப்பட்டது
உப்புநீர்க் குட்டையின் அந்தப்புறம்
உடைபட்ட எழுகரங்களும்
கிழிபட்ட யோனிகளும்
அவநம்பிக்கையின் வீரியத்துடன்
புதைபட்ட பதுங்கு குழிகளின் மீது
அலகில் ஆலிவ் இலை தரித்த பறவை
பிணந்தின்னும் சிங்கத்தின் கைவாளில்
ஓய்வெடுக்கிறது
மண்டையோட்டு மாலையிட்டு
பிள்ளைக்கறி படைக்கிறார்கள்
அழுகுரல்களின் சரணத் திரயம்
புடைத்தெழும் விகாரைகளில்
அடைபட்ட புத்தன்
பித்துப் பிடித்து ஓலமிடுகிறான்.
- யுவபாரதி
2 comments:
கவிதை அவலங்களுடன் , நம் வலியையும் சேர்த்து உணர்த்துவது கேட்க வேண்டியவர்கள் காதுகளில் விழுந்தால் நல்லது. வாழ்த்துக்கள்
நல்ல கவிதை
Post a Comment