August 18, 2010

உள்ளங்கையும் உலகமும்

குழந்தையோடு குழந்தையாய்
உறங்கிக் கொண்டிருக்கிறாய்

தட்டி எழுப்பினதும்
இமை நோக விழி மலர்த்தி
கரம் நீட்டுகிறாய்

உள்ளங்கையில் உயிர்தேக்கி
பற்றி இழுத்ததும்
பதறுகிறது உலகம்.


No comments: