August 25, 2010

பாலஸ்தீனம்


நவகாந்த பரூவா (அஸ்ஸாமி)

நன்றி: Indian Literature

சிறைகளில் குடியமர்த்தினோம்
அவர்கள் வீடு வேண்டியதற்காக
கொலை செய்தோம்
நிலைத்த வாழ்வு கேட்டதற்காக

பிறகு
சிறைகளைத் தகர்த்து
சோளக் கொல்லையில் விரவினோம்

அதோ
நிலத்தில் முளைக்கிறது கை

ஏனைய கைகளும் முளைத்தெழும்
நம் மரணத்தைக் கேலி செய்தபடி.


தமிழில்: மணிகண்டன்

1 comment:

Riyas said...

நல்ல கவிதை,