August 25, 2010

பறவை

ப்ரஃபுல் ஷிலேதர் (மராத்தி)

நன்றி: indian Literature


ஜன்னலருகில் அமர்ந்திருக்கிறாய்

தூர தேசத்துப் பறவைகளுக்கென

மெதுவாய்ப் பறந்து

எதிர்மரத்தின் கிளையில்

நிலைத்ததுன் சாரீரம்

தெள்ளிய வானிலிருந்து கீழிறங்கி

அதே கிளையில் அமர்ந்தது

அப் பறவை

உன்னிடமே திருப்பி விட்டது

உன் சாரீரத்தை

என்ன நிகழ்ந்தது

ஏதும் உணரவில்லை

இப்போது நீ பாடிக் கொண்டிருக்கிறாய்

அப்பறவையினோடு.

தமிழில்: மணிகண்டன்


No comments: