ப்ரஃபுல் ஷிலேதர் (மராத்தி)
ஜன்னலருகில் அமர்ந்திருக்கிறாய்
தூர தேசத்துப் பறவைகளுக்கென
மெதுவாய்ப் பறந்து
எதிர்மரத்தின் கிளையில்
நிலைத்ததுன் சாரீரம்
தெள்ளிய வானிலிருந்து கீழிறங்கி
அதே கிளையில் அமர்ந்தது
அப் பறவை
உன்னிடமே திருப்பி விட்டது
உன் சாரீரத்தை
என்ன நிகழ்ந்தது
ஏதும் உணரவில்லை
இப்போது நீ பாடிக் கொண்டிருக்கிறாய்
அப்பறவையினோடு.
தமிழில்: மணிகண்டன்
No comments:
Post a Comment