நின்றவண்ணம் நிகழும் சுழற்சியை
விரிசல்படுத்தி வெளிவரும்
கொலுவிருக்கும் பொழுதுகள்
கழிந்தொழிய
பிரக்ஞை மிளிர்ந்து மேலெழும்பும்
தீட்சண்யமற்றுத் திரும்ப விழுந்து
இனமறிந்து இரைதேடும்
தனிமை நெருக்க பறந்து
ஒத்தார் ஏக்கத்தில் விழிபிதுங்கும்
சிறகிருந்தும் வானிருந்தும்
தள அசைவில் பயம் விரியும்
சுழற்சியின் போக்கில்
சிறகு மறைத்து
விடுதலைத் துயிலில் விழித்திருக்கும்.
No comments:
Post a Comment