August 18, 2010

காற்றின் குடல்

புலனாகா வெளிக்குள்
பதுங்கி இருக்கின்றன
தீ நகங்கள்

விரிசல்படுத்தா கீறலால்
குரல்வளை கிழிபட
காற்றின் குடல்
தவித்துக் கிடந்த
அன்பின் ரத்தம் பருகுகிறது

தொலைவின் நெருக்கம்
தேவை கூட்ட
பவனி வரத் துடிக்கிறது
இருப்பின் கனம்.


No comments: