August 18, 2010

புலர்

நினைவுச் சுவர் முழுக்க
இடைவெளியின்றி கீறல்கள்

யோசனையின் ஜ்வாலைக்குள்
நீலம் உனது

தலைக்குப் பின்
மேகம் நகர்கையிலும்
தொண்டைக்குள் ரத்தம் முட்டும்

நிமிர்ந்து வெறித்து
அக்கம்பக்கம் அருவெறுத்து
சுயவதையுடன் நகரும்
வழக்கமாய் என் பொழுது.

No comments: