February 22, 2017

கொல்லப்படாமலும் இல்லை

தகடூரில்தான்
உடன்போக்கு எய்தினேன்
ஔவை கூடப் பாடவில்லை
உமையொரு பாகன்முன்தான்
பேசிக் கொண்டிருந்தேன்
அறுபத்து மூவருக்கும் அக்கறையில்லை
துணையாள் கைபற்றித்தான்
பாதை கடந்தேன்
பாதை கடக்கவேயில்லை
கொல்லப்பட்டேன்
கொல்லப்படவில்லை
கொல்லப்படாமலும் இல்லை.

23.01.2017

No comments: