December 28, 2011

மாளாது!


என் கால்களை வெட்டி எறிந்தாலும் 

என் கண்களைப் பிடுங்கி மிதித்தாலும்

நான் நடை பழகிய 

என் மண் நினைவில் இருக்கிறது.


என் நாவை அறுத்து எறிந்தாலும்  

என் உடலைக் கடலில் வீசினாலும்

நான் மழலை பழகிய‌

என் மொழி காற்றில் மிதக்கிறது.



‍- யுவபாரதி


(ராஜபக்சேவுக்கு)

1 comment:

சசிகலா said...

நான் மழலை பழகிய‌

என் மொழி காற்றில் மிதக்கிறது.
அருமை