January 22, 2014

சாதல் இனிது


கயிற்றை விடவும் கழுத்தை 
நெரிக்கிறது

கத்தியை விடவும் ஆழத்தில் 
அறுக்கிறது

நஞ்சை விடவும் மெல்ல 
அடைக்கிறது

கடலை விடவும் கணத்தில் 
இழுக்கிறது

இரயிலை விடவும் எங்கோ 
எறிகிறது வாழ்வு

ஆகவே சாகவில்லை.


- யுவபாரதி

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது...

வாழ்த்துக்கள்...