February 19, 2014

சொல் நடை



குத்திக் குத்தி
இரத்தமெலாம் வற்றியதும்
சொல் பெருகியது

வெகுண்டு உதைத்ததில்
சுவரோரம் விழுந்தாலும்
சொல் மண்ணில்லை

கண்ணோடு கலங்கியது
காதோடு வலியேற்றது
கையோடு கெஞ்சியது

காலோடு
தவழ்ந்து போகிறது.


- யுவபாரதி

No comments: