May 05, 2015

இருப்பு

முள்வேலி தழுவி
மொக்குதிர்த்த கொடிமுல்லையும்
உடைந்த கால்தூக்கி
தத்திவரும் குட்டிப்பூனையும்
கவிதை தெரியாத என்னோடு
காத்திருக்கின்றன.

No comments: