May 04, 2015

வெளிமரம்

ஊடாடும் சூரியன்
ஒளிப்புள்ளிகளால் நிழற்கோலமிடுவான்
இளவேனிலின் சங்கேதமொழியில்
பறவைகள் குலாவியதுண்டு
காற்றுள்ள வெளியில்
அசையாதிருந்தேன்
புயல்பெயர்த்து எறிந்த
ஓலம் கேட்டிருக்காது
அடிமரத்தில் புடைத்த
பெயர்கள் வானம் பார்ப்பது தெரிந்திருக்காது
பீளைக்கண் பித்தன்
ஒடிந்த என் கிளையால்
வேர்தட்டிப் பாடுவதும்
தீண்டியிருக்காது
காற்றுள்ள வெளியில்
அசையாதிருக்கும் என் பிரதேசம்
உங்கள் பார்வைக்கு அப்பாலுள்ளது.

No comments: