January 14, 2017

இப்படியா கைவிடும்

எப்போது கிளம்பிப் 
போனார் இளையராஜா
இறுகச் சாத்திய சன்னல்
அதிரக் கேட்ட துடியொலியை
எங்கே கொண்டுபோனான்
சாமக் கோடாங்கி
மணிக்கிருமுறை ஏன்
விட்டுவிட்டுக் குரைக்கிறது
தெரு மணி
பூனைக் குழந்தையின்
அழுகுரல் எப்படி
சுவர்க்கோழியோடு மோதுகிறது
கைகால் பரத்திக் கவிழ்ந்து
என்னமாய் உறங்குகின்றன 
புத்தகங்கள்
புட்டிமதுவின்
கடைசிச் சொட்டும்
இப்படியா கைவிடும்.

09.01.2017

No comments: