ஞாபகத்தின் மௌன வாசிப்பில்
படியேறுகிறதுன் பிம்பம்
திரும்புதலின் ஏக கணத்தில்
இருப்பிழந்த உலகத்தில்
பிடிப்புகள்
நிராதரவுடன் கலைகின்றன
இடைவெளியின் நெருக்கத்தில்
மக்குகின்றன சருகுகள்
ஊசலில் இழைந்தபடி
சிறகசைத்து மறைப்பினும்
நீட்சி மடங்கிய உணர்குழலுள்
தேங்கிக் கிடக்கிறதுன்
ஆசை.
No comments:
Post a Comment