August 18, 2010

மௌனத்தின் வேர்

எதிர்பார்ப்பின் நெடுங்கரங்கள்
திசையெங்கும் நீண்டிருக்கின்றன

மரித்த மனிதத்தின் பிம்பமேந்தி
ரத்தப் படலத்தில் மிதக்கிறது
கருமணி

விஷரேகைகள் நெளியும்
நடுநிசிக் காற்றில் பிய்த்தெறியப்பட்ட
கனவின் மண்மடிப்புகளில்
ஆழப் புதைந்திருக்கின்றது
மௌனத்தின் வேர்

வாசப்பூக்களைத் தேடிச்
சோர்கிறது வண்டு
கண்ணீர்க் கோடுகளின்
ரீங்காரப் பாதையில்.


No comments: