August 15, 2010

நீர்ப்பாறை

புகையும்
உள்ளார்ந்த அழுகையுமாய்
இரவின் ஓலம்

பௌர்ணமிப் பெருவெள்ளம்
நேசம் பூக்கும்
ஜன்னலோரங்களை மூழ்கடித்து
வெற்றுச் சிப்பிகளை
இறைத்துப் போகிறது

விண்ணிலிருந்து ஏந்தித்
தழுவ வந்த கரங்கள்
கால்களில் இடறி
புழுதியில் புரள்கின்றன

காலகதி ஒரு நீர்ப்பாறை
நானும் நீயும் வெள்ளோட்டம்.

No comments: