January 17, 2011

ம.பொ.சி.யின் "தமிழன் குரல்" இதழ்த் தொகுப்பு - மூன்று நூல்கள்

தமிழக எல்லை மீட்பில் (சென்னை, திருத்தணி, குமரி) முக்கியப் பங்காற்றியவரும், தமிழரசுக் கழக நிறுவனரும், தமிழ்த் தேசிய முன்னோடியுமான சிலம்புச் செல்வர் .பொ.சிவஞானம் அவர்கள் 1954 - 1955 காலகட்டத்தில் நடத்திய 'தமிழன் குரல்' என்ற மாத இதழ் அவருடைய பெயர்த்தி தி.பரமேசுவரியால் தொகுக்கப்பட்டு அரசியல் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், படைப்பிலக்கியம் என்று மூன்று நூல்களாக சந்தியா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

1. தமிழன் குரல் - அரசியல் கட்டுரைகள்

"எங்கெங்கும் தமிழ் இனத்தவர் போர் முழக்கம் செய்து வரும் நேரத்தில்தான் அவர்களுக்கெல்லாம் ஆதரவாகப் பணிபுரியத் 'தமிழன் குரல்' வெளிவருகிறது. தமிழகம் தனி ஆட்சி பெறவேண்டும்; துண்டுபட்ட தமிழ்ப் பகுதிகளெல்லாம் தாய்த் தமிழகத்தோடு ஒன்றுபடவேண்டும்; தமிழகத்தில் தமிழ் ஒன்றே ஆட்சி மொழியாதல் வேண்டும்..." - ம.பொ.சி. (ஆகஸ்டு 1954)

இவ்விதழில் ம.பொ.சி. எழுதிய தலையங்கம், கண்ணோட்டம் (துணைத் தலையங்கம்) என்ற தலைப்பிலான கட்டுரைகளோடு, ம.பொ.சி., மு.வ., நாமக்கல் கவிஞர், சோம.லெ., ஏ.ஜி.வேங்கடாச்சாரி, ரா.பி.சேதுப்பிள்ளை, வெ. சாமிநாத சர்மா, குயிலன் ஆகியோர் எழுதிய அரசியல், வரலாற்றுக் கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.


தமிழ்த் தேசியத்தின் குரல் மீண்டும் வலுவாய் எழும்பத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழலில், காலத்தின் குரலாய்த் 'தமிழன் குரல்' நூல்வடிவில் வருவது மிகச் சரியானதாகும்.


மொத்த பக்கங்கள் : 272; விலை : ரூ.150/-.



2. தமிழன் குரல் - இலக்கியக் கட்டுரைகள்

"தமிழரசு இயக்கத்தாருக்கு இலக்கியம் என்பது பொழுதுபோக்குக்குப் பயன்படும் பொருளல்ல. கடந்த காலத் தமிழகம் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடி; இன்றைய தமிழகத்தின் பண்பாட்டுத் தரத்தை உரைத்துப் பார்க்கப் பயன்படும் உரைகல்; எதிர்காலத் தமிழகத்துக்குத் தேவைப்படும் செல்வங்கள் எலாம் நிரம்பியுள்ள களஞ்சியம்" - ம.பொ.சி.
அரசியல் இதழாக மட்டுமில்லாமல், இலக்கியம் பேசும் இதழாகவும் இருந்த 'தமிழன் குரலி'ல் ம.பொ.சி.யுடன் நாமக்கல் கவிஞர், ரா.பி.சேதுப்பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, அ.ச.ஞா., பெ.தூரன், கி.வா.ஜ., கா.பொ.ரத்தினம், நா.பார்த்தசாரதி, டி.கே.சண்முகம், குன்றக்குடி அடிகளார், தெ.பொ.மீ., சோம.லெ., ந.சஞ்சீவி, பி.ஸ்ரீ. ஆகியோரும் பல்வேறு இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
சங்க இலக்கியம், குறளும் சிலம்பும், பிற்கால இலக்கியம் என வகைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன.


மொத்த பக்கங்கள் : 215; விலை : ரூ.125/-.



3. தமிழன் குரல் - படைப்பிலக்கியம்

'தமிழன் குரல்' இதழில் வெளிவந்த கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், பல்துறைக் கட்டுரைகள் ஆகியன படைப்பிலக்கியம் என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.


தண்டபாணி தேசிகர், வழுவூர் ராமையா பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, டி.கே.சண்முகம், தெ.பொ.மீ., சோம.லெ., பெ.தூரன், வல்லிக்கண்ணன், லக்ஷ்மி, கவிஞர் கா.மு.ஷெரீப், ர.சண்முகம் (ரசம்), குயிலன் ஆகியோர் 'தமிழன் குரலில்' எழுதியுள்ள படைப்புகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

மொத்த பக்கங்கள் : 272; விலை : ரூ.145/-.


இம்மூன்று நூல்களும் சந்தியா பதிப்பகத்தில் கிடைக்கும்.

முகவரி:
சந்தியா பதிப்பகம்,
பு. எண்: 77 , 53 ஆவது தெரு,
9 ஆவது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை - 600 083.
இணைய தளம்: http://www.sandhyapublications.com/
மின்னஞ்சல் : sandhyapublications@yahoo.com
தொலைபேசி எண்: 044 - 24896979 .


தொகுப்பாசிரியரின் வலைப்பூ: http://www.tparameshwari.blogspot.com/
தொகுப்பாசிரியரின் மின்னஞ்சல்: thi.parameswari@gmail.com

No comments: