August 20, 2013

வீட்டுமரம்

கால்
விறைக்கத் தொடங்கியது
நான் நகரவில்லை
விரல் பத்தும் வேராக
தரை அகழ்ந்து இறங்கியது.

கை
கனக்கத் தொடங்கியது
நான் திமிறவில்லை
விரல் பத்தும் கிளையாக
சுவர் குடைந்து பரவியது.

தலை
சரியத் தொடங்கியது
நான் அசையவில்லை
காது கன்னம் நரம்பேறி இலைகுலுங்க
கண் இரண்டும் ஒளியிழந்து பூவீழ
மூளை உருகி மறைந்தது

மரம்
நிலைக்கத் தொடங்கினேன்.

- யுவபாரதி

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டும்...!