February 13, 2015

'என்னை அறிந்தால்' - குறிப்புகள்

'என்னை அறிந்தால்' திரைப்படம் நேற்று பார்த்தேன்.

வழக்கமான நாயக மையப்படம்தான் எனினும்,

1. ஹேமானிகா கதாபாத்திரம் நன்றாக வந்திருக்கிறது. அதை ஏற்றிருக்கும் திரிஷா சிறப்பாகவே செய்திருக்கிறார். நடிகர்-நடிகைகளைத் தேர்வு செய்தபிறகே கதையும் கதாபாத்திரங்களும் காட்சிகளும் உருப்பெருக்கப்படும் காலம்தான் என்பதனாலும் இருக்கும்.

2. கேள்விக்குட்படாத நம்பிக்கையின் அடிப்படையில் எதிர்நாயகன் மீது ஐயம் கொள்ளாத தன் நம்பிக்கைப்பிசகை எண்ணி வருந்துபவனும், தன் கணிப்பின் தோல்வியை ஏற்றுக்கொள்பவனும், குத்துவசனம் பேசாதவனுமான நாயகனாக சத்யதேவ் அஜித் நன்றாகச் செய்திருக்கிறார்.

3. நாயகன் சத்யதேவுக்கு சற்றேறக்குறைய எதிர்நாயகன் விக்டருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. நாயகன் அஜித்துக்கு எதிரான எதிர்நாயகன் கதாபாத்திரம் ஏற்றிருப்பவர் அருண்விஜய் என்பதாலும் இருக்கும்.

4. தேன்மொழி கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. நாயகிகள் இருவரில் ஒருவரேனும் முட்டாள் காதலியாக இருந்தால்தான் திரைவணிகத்திற்கு ஏற்புடையது என்பதனாலிருக்கும். எனினும் இதற்கு அனுஷ்கா போன்றவர் தேவையில்லை.

5. ராபர்ட் என்ற கதாபாத்திரத்தில் நாயகனுக்குத் தேவையற்ற ஒரு துணைப்பாத்திரத்தில் விவேக் நடித்திருப்பினும் வழக்கமான அவரது எரிச்சலூட்டும் நகைச்சுவைகள் ஏதுமில்லை என்பது ஆறுதல்.

6. பேபி இஷா கதாபாத்திரம் ஏற்றிருக்கும் குழந்தை நன்றாகவே நடித்திருக்கிறாள்.

No comments: