May 03, 2015

தெறிப்புகள்

1. காசாளரின் கண்ணாடி சன்னல்
    குழந்தையின் கைவிரல் பதிகிறது
    பணத்தாள்கள் குறிக்கின்றன.

2. பிள்ளை வாத்துகள்
    செல்லநடையில் விரைகின்றன
    சுடுமணற்சாலை குளமாகக்கடவது.

3. காலத்தில் குதித்துவிட்டாள்
    கரைமணலில் வீடுகட்டி
    காத்திருக்கிறது குழந்தை.

4. உறையாத புன்னகை
    அலையலையாய் ஓடுகிறது
    கடல் பிறக்கிறது.

5. கைதட்டி முகம்வழுக்கி
    சிதறுகிறது கூட்டம்
    சொற்களைத் தேக்குகிறாய்.

No comments: