June 02, 2016

ஒக்கரைப்பட்டி

நுரைத்துப் பொங்கிய
மேகச் சுமையால் மெய்சிலிர்த்து
இன்னும் எத்தனை நாள்தான்
அசையாதுறங்கும் மேற்குமலை

மலையெழுப்ப விரையும்
காற்றைத்தான் குழப்பிவிடுகின்றனவா
வேதாந்தாவின் இராட்சத வெண்விசிறிகள்

காற்றசைத்த சோளந்தட்டையை
மென்றுவிழுங்கும் ஒட்டகமும்
மூன்று கல்நட்டுச் சமைத்தபடி
விசிறிபார்க்கும் சர்க்கஸ்காரர்களும்
யார்களிக்க மாலைக்குக் காத்திருக்கிறார்கள்

கடந்துவிரையும் பயணிகள்
இறைக்கும் காசுக்காக
காலுயர்த்திக் கனைக்கும் குதிரையோடு
காலகாலமாய்க் காவலிருக்கும்
கணவாய்ச் சாத்தனை
இழுத்துவந்து கேட்டால் தெரியுமா. 

No comments: