August 18, 2010

பூவனம்

சந்திப்பின் புன்னகையில்
நீ பேசத் தொடங்குகிறாய்

உன் வெளியில்
ஆழப் புதைகிறது
மௌனப் பழுப்பேறிய
என் மொழி

பிரிவின் வாசமறியா
பூவனத்தில்
கைப்பிடிக்க அலைகின்றன

உன் அன்பும் என் அழுகையும்
அல்லது
என் அன்பும் உன் அழுகையும்.

1 comment:

DANIEL JAMES said...

காதலுக்கு பூவனத்தை கொடுக்காதீர் தோழரே,மலர்ந்த இடத்தில் வாசமும் பூவும் நிலைப்பது குறைந்த நேரந்தான்.

நல்ல காதலை வெளிப்படுத்துகிறது கவிதை.
நன்றி.