October 04, 2011

ம.பொ.சி. நினைவு நாள் விழா மற்றும் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா - ஒலிப்பதிவு

ஞானசிவம்,பெ.சு.மணி,இல.கணேசன்,ஊரன் அடிகள்,
எஸ்.கே.பாலசுப்ரமணியன்,ஏ.நடராசன்,கலவை கோபாலகிருஷ்ணன் 
03.10.2011 அன்று சென்னை மயிலாப்பூர் லேடி சிவசாமி கலாலயா அரங்கில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் 16-வது நினைவு நாள் விழா மற்றும் அவரது ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.கே.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வள்ளலார் நெறி பரப்புநர் ஊரன் அடிகள், சென்னை வானொலி நிலைய மேனாள் இயக்குனர் ஏ. நடராஜன், பொற்றாமரை இலக்கிய அமைப்பின் இல.கணேசன், பாரதியியல் ஆய்வறிஞர் பெ.சு.மணி ஆகியோர் பேசினர். கலவை கோபாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.


இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ம.பொ.சி.யின் பெயரன் தி.ஞானசிவம் செய்திருந்தார். விழாவைக் கவிஞரும் ம.பொ.சி.யின் பெயர்த்தியுமான தி.பரமேசுவரி தொகுத்து வழங்கினார்.


இவ்விழாவின் ஒலிப்பதிவு இது. 







ஒலிப்பதிவு - யுவபாரதி

No comments: