November 26, 2011

பாமியான் புத்தர் [Bamiyan Buddha]

- பிரவீண் கதாவி (குஜராத்தி)


புறப்பட்டேன்
பொன்னை மணிகளை
போகத்தை விட்டுப்
புறப்பட்டேன்

அந்தப்புர மகளிரை விலக்கி
வெள்ளி மதுக் குவளைகளை உதறிப்
புறப்பட்டேன்

இராகுலனை அழவிட்டும்
யசோதரையைத் தூங்கவிட்டும்
புறப்பட்டேன்

பிறப்பு இறப்பிலிருந்து
விடுதலை கொள்ள
உருவமும் துறந்து புறப்பட்டேன்

இன்று பார்ப்பது
இருவிதப் பிறவிக் குருடர்களை

ஒரு சிலர் எனக்குச் சிலைகள் வைத்துப்
ஆபரணங்களால் அலங்கரிக்கிறார்கள்.
மறு சிலர் என் சிலைகளை உடைத்தெறிகிறார்கள்.



நன்றி : Indian Literature No.258
ஆங்கிலம் வழி தமிழில் : யுவபாரதி

[குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் பிரவீண் கதாவி (பி.1951) நன்கு அறியப்பட்ட குஜராத்தி தலித் கவிஞரும் சிறுகதை ஆசிரியரும் ஆவார். குஜராத்தியில் மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கும் இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தி, மராட்டி, கன்னடம் மற்றும் உருதுவிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன]

1 comment:

திசைசொல் said...

அற்புதம் கவிதையும்,மொழி பெயர்ப்பும்