July 10, 2012

கேள்விகள் குறித்து…

- யுவபாரதி



1

கேள்விகள்
உயிரற்றவை என்கிறார்கள்

அவை
எந்நேரமும் நீந்துகின்றன
எம்பிக் குதிக்கின்றன
ஊர்ந்து நகர்கின்றன
உயரே பறக்கின்றன
உடலுறிஞ்சி வளர்கின்றன

கேள்விகள் ஐவகை உயிரிகள்


2

கேள்விகள்
பொருளற்றவை என்கிறார்கள்

அவை
இறுகிக் கிடக்கின்றன
அடித்துச் செல்கின்றன
சுழற்றி வீசுகின்றன
சுட்டுப் பொசுக்குகின்றன
உருவற்று விரிகின்றன

கேள்விகள் ஐம்பருப்பொருட்கள்


3

கேள்விகள்
நிலையற்றவை என்கிறார்கள்

அவை
தீராப் பசியோடு காத்திருக்கின்றன
பதில்கள்
மீண்டும் மீண்டும் உணவாகின்றன

கேள்விகள் நிலைபெற்றவை.

No comments: