September 07, 2015

அடுத்த வாகனம்

நெடுஞ்சாலையோரம்
நிமிர்ந்தோ ஒருக்களித்தோ
குப்புறவோ கிடக்கின்றன
சில வாகனங்கள்
முகம் நைந்தோ
உடல் கிழிந்தோ சில

மரணத்தோடு
அலறலும் மூர்ச்சையும் கூட
அப்புறமாகின்றன
சில நிமிடங்களில்
சிந்தி உறைந்த உதிரத்தில்
அடுத்த வாகனம்
விரைகிறது.

No comments: