எல்லாரையும்
பார்க்கிறது
எல்லார் பார்க்கவும்
இருக்கிறது
பைந்துகில்
போர்த்தாத புலத்தில்
சூரியன் கவிழ்ந்து
கிடக்கிறான்
காலக்குகையின்
ஓயாத இரைச்சலை
காற்று விழுங்குகிறது
சமணமுனிவன்
கல்படுக்கையில்
மேய்ந்து களைத்த
வெள்ளாடு
ஓய்வெடுக்கிறது
மது உலர்ந்த
நெகிழிக் குவளை
தேக்கிய மழைநீரில்
பாழி ஈத்தவன்
பேர்
தலைகீழாய்த்
தொங்குகிறது
தூரத்து யௌவனத்தைக்
கண்ணிடுக்கிப்
பார்க்கும் மூப்பனென
எல்லாரையும்
பார்க்கிறது
எல்லார் பார்க்கவும்
இருக்கிறது
மலை.
No comments:
Post a Comment