September 03, 2016

ஊமை ஓவியம்

இருளின் பாலை வெளிச்சத்தில்
நிலைகுத்தி விழிக்கிறது கண்

சுழித்தோடும் கால ஓலம்
ஒற்றைக்காதையும்
செவிடாக்கியிருக்கிறது

உறிஞ்சிய நீர்மை
என்றோ உலர்ந்திருக்க
ஒட்டியிருக்கிறது கன்னம்

சொல்லாளும் உலகில்
ஊமை ஓவியம்
ஆணியடிக்காத சுவரில்
ஆடிக் கொண்டிருக்கிறது.

No comments: