January 11, 2010

நதி வழி

நிறங்களின் நிரந்தரம்
இழந்து தவிக்கிறது வானம்
ஓவியனின் தூரிகை திருப்தியற்றது
தலை தூக்க சலித்து
பாறை இடுக்குகளின்
தற்கொலை முனைக்கு
விரைகிறது நதி

சடலத்தின் குளிரில் மூழ்கி
எழுகின்றன சில கால்தடங்கள்
காற்றின் விரலில் கரைகடந்து
சூன்யதாகத்துக்கு இரையாகலாம்
தனித்தலின் மெல்லிய வலுவுடன்
கரிக்கும் அலைவிளிம்புகளை
ருசிக்கும் மட்டும் வாய்க்கிறது
தீண்டலின் துக்கம்.

- ஆர்.மணிகண்டன்

No comments: