January 04, 2010

யாத்ரீகனின் மரணம்


கனவுகளின் தகிப்பில்
புகைகிறது உயிர்
வெண்புறா விட்டகன்ற
கரங்களில்
கழன்ற தோலும்
பழுப்பு ரத்தமுமாய்ச் சரிகிறது
வெளிச்சம் உலர்த்திய வெற்றுடல்
இமை வருடி மௌனம் தின்னும்
மணல் திசுவின் ஈமொய்க்கும் கருணை
நரம்பில் நழுவி
விரிகிறது இருளின் வாசனை
அழைத்து விரட்டி
தாளமிடுகிறது வெளியின் மடி.

- யுவபாரதி

No comments: