August 25, 2010

கவிதைப் புத்தகம்


நாம்தேவ் டசால் (மராட்டி)
நன்றி: INDIAN LITERATURE

நாம்தேவ் டசால்
நீ
கதவைத் திறக்கவேயில்லை
இலக்கை நான் எட்டியும் கூட
எப்படி எழுத முடியும்
நட்சத்திரங்களை
இந்தப் பழைய காகிதத்தில்?
வெகு காலத்திற்கு முன்பே
கபீரிடம் ஒப்படைத்தேன்
என் கவிதைப் புத்தகத்தை

கபீர் இல்லை
இந்தச் சந்தையில் இப்போது
நான் மட்டும்
இந்த மரபு ஒப்புக் கொள்ளவில்லை
விடுதலையின் சத்தியத்தை
ஆசையில் சிறகுகளே
முளைத்துக் கொண்டிருக்கும்
இருண்ட சாம்ராஜ்யத்தில்.

தமிழில்: யுவபாரதி 

No comments: