நீரஜ் தையா (ராஜஸ்தானி)
நன்றி : Indian Literature
நினைவிருக்கிறது எனக்கு
உன் ஈர விழிகளும்
கண்ணீர் துடைத்த
என் கரங்களும்
நீ உணராமல்
இருந்திருக்கலாம் அந்த ஸ்பரிசத்தை
ஆனால்
எனக்குத் தான் தெரியும்
விலைமதிப்பற்ற அந்த
பொருளின் கனம்
என் ஞாபகத்தின் குறுகிய
வெளியை நீ பார்வையிடுகையில்
கண்ணீர் சிந்துகிறேன்
கண்ணுக்குத் தெரியாமல்.
தமிழில் : மணிகண்டன்
No comments:
Post a Comment