மலேசியாவிலிருந்து உயர்ச் சிகிச்சைக்காகத் தமிழகம் வந்தும் விமான நிலையத்திலேயே பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட வடுவே நம்மில் இன்னும் மறையவில்லை. இதற்கிடையே ஈழத்திலுள்ள வல்வெட்டித் துறை மருத்துவமனையில் அண்மையில் மரணமடைந்து நம்மைப் பெருஞ் சோகத்திலாழ்த்தியுள்ளார் அவர். இந்நிலையில் அவரது அஸ்திக்கும் சிங்கள இனவாதம் செய்துள்ள அவமானம் நம்மைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
வல்வெட்டித் துறைக் கடற்கரையிலுள்ள ஊரணி மயானத்தில் பார்வதி அம்மாளின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில், அதே இரவில், சில நாய்களை அரைகுறையாக எரித்துப் போட்டிருக்கின்றன சில மனித மிருகங்கள். மறுநாள் அஸ்தியைச் சேகரிக்க முடியாதபடி சிதறடித்துச் சென்றிருக்கின்றன அவை. அஸ்தியைச் சேகரிக்கச் சென்றோர் அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த அந்நாய்களின் உடல்களைக் கடற்கரையில் புதைத்துவிட்டு, பார்வதி அம்மாளின் அஸ்தியைச் சிரமத்துடன் சேகரித்துக் கடலில் கரைத்துள்ளனர். சிங்களப் பேரினவாதத்தின் இவ்வடாத செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
- யுவா
1 comment:
மனித குலத்திற்கே அவமானம் இந்த சிஙகள இனம். இரத்தவெறிபிடித்தவாகள். அரக்க சுபாவம் கொண்டவாகள். மரணித்த உடலங்கள் மீது தமது காம இச்சையை தணித்துக் கொண்டவர்கள். அம்மாவின் ஆஸ்தியை களங்கபடுத்தியது ஆச்சரியப்பட வேண்டியவிடயமல்ல. அப்படி அந்த மிலேச்சர்கள் செய்யாமல் விட்டிருந்தால்தான் ஆச்சரியப்படடடிருக்க வேண்டும். கேடு கெட்ட உலகம் இனியாவது புரிந்து கொள்ளட்டும் யார் பயங்கரவாதிகள் என்பதனை.
Post a Comment