November 26, 2011

ஒரு கவிதையின் பிறப்பு [Birth of the Poetry]

பலபார்த்தி இந்திராணி (தெலுங்கு)


வார்த்தைகள்
அங்கும் இங்கும் அலைகின்றன‌

அர்த்தங்கள்
ஏதேதோ திசைகளை வெறிக்கின்றன‌

எண்ணங்கள்
முன்னும் பின்னும் ஊசலாடுகின்றன‌

இறுதியில்

வெறுமையிலிருந்து வீழ்கிறது
பூ.



நன்றி : Indian Literature No.256
ஆங்கிலம் வழி தமிழில் : யுவபாரதி


[பொறியியல் வல்லுனரான பலபார்த்தி இந்திராணி (பி.1977) பெங்களூரில் வசிக்கிறார். ICFAI பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். 2005 -இல் வெளிவந்த இவரது முதல் கவிதைத் தொகுதி இஸ்மாயில் விருதைப் பெற்றது.]