September 16, 2015

புதைந்த பாதை : ஒரு குறிப்பு

நெல்லைக்கு அருகிலுள்ள திருப்பணி கரிசல்குளம் எனும் கிராமத்தில் வாழும் தலித்துகளின் கடந்த கால நினைவுகள், கடந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல் திராவிட அரசியல் கட்சிகள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய காலம் வரை நடைபெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்கள், கொழும்பு மும்பை முதலான ஊர்களில் வேலை பார்த்து அதைக் கொண்டு கிராமத்தில் விளை நிலங்களை வாங்கியதோடு கல்விக் கூடங்களையும் நிறுவியது, அவ்விளை நிலங்களுக்கு மறவர்கள் கோனார்கள் முதலான உள்ளூர் ஆதிக்க சாதியினரால் ஏற்பட்ட பொருளிழப்பு, மனக்குமுறல், சட்டப் பூர்வமாக எதிர்த்து நின்ற மந்திரமூர்த்தி கொலை, திமுகவின் ஆதரவாளர்களாகவும் அதற்கு உழைத்தவர்களாகவும் தலித்துகள் இருக்க, அதன் ஆட்சியதிகாரம் மறவர் முதலான சாதியினரின் தலித்துகள் மீதான அதிகாரத்திற்கே சாதகமாகி விட்ட துயரம் என நீள்கிறது 'புதைந்த பாதை' எனும் ஜெ.பாலசுப்பிரமணியத்தின் நூல். 

ஒரு குடும்பத்தின் ஏழு தலைமுறைகளின் குடிமரபை வாழ்வியல் மாற்றங்களை சுருக்கமாக விவரிக்கிறது 32 பக்கங்களே உள்ள இந்த சிறு நூல்.

No comments: