July 22, 2016

புத்த நிட்டை

பூட்டப்படாத கதவைத் தட்டுகையில்
யாரும் விழித்திருக்கவில்லை
திறந்த அரவம் கேட்டு
திகைத்தெழுந்தவனிடம்
உறங்க இடம் கேட்டான்
ஒதுக்கித் தருவதற்குள்
குத்திட்டமர்ந்து தம் காலிலேயே
கண்ணயர்ந்திருந்தான் புத்தன்

உண்ணாமல் உறங்கிவிட்டதான தவிப்போடு 
போர்வையாலவன் உடல் மூடி
வெதுப்பித்துச் சரிந்தேன்

விடிந்ததும் தேடினேன்

நாற்புறமும் உப்புநீர்
சூழ்ந்த கிழக்கு முற்றத்தில்
எம் உதிரம் ஓட ஓட
ஆழ்ந்த நிட்டையிலிருந்தான்.


19.06.2016

No comments: