திலீப் புருஷோத்தம் சித்ரே (மராட்டி)
மூடுபனி போல
பாலையில் கவிழ்ந்திருக்கிறது
மரங்கள் ஏதுமற்ற
பறவைகளின் சங்கீதமற்ற ஒரு வனத்தில்
ஹோவென்ற பாலையின் நடனத்தில்
வார்தைகளின்மை தவிக்கிறது
அதன் உடலிலேயே
சங்கமத்தின் அர்த்தம்
நிழலுடன் சேர்வதல்ல
எனினும்
நிழலுடன் சேர்கிறது
அழிந்த காட்டில் முடிவற்ற
சருகுகளின் சப்தம்.
தமிழில்: மணிகண்டன்
No comments:
Post a Comment