கிருஷ்ணதேவராயர் அரசவைக்கு ஒரு பன்மொழிப் புலவர் வந்தார்.
"உங்கள் அரசவையில் யாரேனும் என் தாய்மொழியைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?" என்று சவால் விட்டார்.
இராயர் அரசவையிலிருந்த அஷ்டதிக் கஜங்கள் எனப்பட்ட எட்டு பெரும் புலவர்களும் பல்வேறு மொழிகளில் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அவரும் அவரவர் கேட்ட மொழிகளில் தெளிவாகப் பதிலளித்தார். சப்ததிக் கஜங்கள் தோல்வி கண்டு தலைகுனிந்தனர். இராயர் அரசவையை ஏளனமாகப் பார்த்தார் அப் பன்மொழிப் புலவர்.
"உங்கள் அரசவையில் யாரேனும் என் தாய்மொழியைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?" என்று சவால் விட்டார்.
இராயர் அரசவையிலிருந்த அஷ்டதிக் கஜங்கள் எனப்பட்ட எட்டு பெரும் புலவர்களும் பல்வேறு மொழிகளில் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அவரும் அவரவர் கேட்ட மொழிகளில் தெளிவாகப் பதிலளித்தார். சப்ததிக் கஜங்கள் தோல்வி கண்டு தலைகுனிந்தனர். இராயர் அரசவையை ஏளனமாகப் பார்த்தார் அப் பன்மொழிப் புலவர்.

அன்றிரவு, அப்புலவர் தங்கியிருந்த மாளிகைக்குள் யாரும் அறியாமல் நுழைந்தான் தெனாலிராமன். அப்புலவரது படுக்கை அறையின் ஜன்னலை ஒட்டியிருந்த கையில் தண்ணீர் நிறைந்த ஒரு செம்புடன் ஒரு புதரில் ஒளிந்து கொண்டான்.
உண்டு களித்து சற்று நேரத்தில் அயர்ந்து உறங்கிப் போனார் அப்புலவர். இதுதான் தக்க தருணம் என உணர்ந்த தெனாலி ராமன், கையில் இருந்த செம்பு நீரை ஜன்னல் வழியாக அப்புலவன் மீது ஊற்றினான். திடுக்கென்று விழித்த புலவர், "ஆருடெ அது? பட்டி மோனே!" என்றவாறு எழுந்தார்.
உண்டு களித்து சற்று நேரத்தில் அயர்ந்து உறங்கிப் போனார் அப்புலவர். இதுதான் தக்க தருணம் என உணர்ந்த தெனாலி ராமன், கையில் இருந்த செம்பு நீரை ஜன்னல் வழியாக அப்புலவன் மீது ஊற்றினான். திடுக்கென்று விழித்த புலவர், "ஆருடெ அது? பட்டி மோனே!" என்றவாறு எழுந்தார்.
வெளியே தலைகாட்டாது வந்த வழியே வெளியேறினான் தெனாலிராமன்.
மறுநாள் காலை அரசவை கூடியது.
தெனாலிராமனைப் பார்த்து, "இராமா! பன்மொழிப் புலவரிடம் நீ கேட்க விரும்பும் கேள்விகளைக் கேட்கலாம்" என்றார் இராயர். "அவசியமில்லை அரசே! அப்புலவரது தாய்மொழி மலையாளம்" என்றபடி, முதல்நாள் இரவு நடந்ததைக் கூறினான் தெனாலிராமன். புலவரைப் பார்த்தார் இராயர். "உண்மை" என ஒப்புக் கொண்டார் அப்புலவர்.
தெனாலிராமனைப் பார்த்து, "இராமா! பன்மொழிப் புலவரிடம் நீ கேட்க விரும்பும் கேள்விகளைக் கேட்கலாம்" என்றார் இராயர். "அவசியமில்லை அரசே! அப்புலவரது தாய்மொழி மலையாளம்" என்றபடி, முதல்நாள் இரவு நடந்ததைக் கூறினான் தெனாலிராமன். புலவரைப் பார்த்தார் இராயர். "உண்மை" என ஒப்புக் கொண்டார் அப்புலவர்.
"அரசே! ஒருவன் விழிப்பு நிலையில் நூறு மொழிகளில் தங்கு தடையின்றி உரையாடினாலும், அவனது கனவு நிலையில் தாய்மொழியே உடனிருக்கும். ஆழ் உறக்க நிலையிலிருந்து விழிக்கும்பொழுதும் அதுவே உடன் வெளிப்படும்" என்றான் தெனாலிராமன்.
- யுவபாரதி
(பின்குறிப்பு : இது முன்னொரு காலத்தில் ஒரு தெலுங்கு அரசவையில் ஒரு மலையாளப் புலவர் குறித்து எழுந்த வாதம். நடப்புக் காலத்தில் - ஆரம்பக் கல்வி முதற்கொண்டே ஆங்கிலத்தில் படிக்கும் - உறங்கும் தமிழனிடத்தில் இதனைப் பரிசோதிக்க முடியுமா எனத் தெரியவில்லை. "Shit! who is that...?" என்று இவன் எழுந்துவிட்டால்...!)
No comments:
Post a Comment