1
காதடைத்து
உயிர்வற்றிச் சாகும்
யாசகனின் திருவோடு
இரக்கத்தின் ஒரு பருக்கை
பலத்த ஓசையுடன்
2
காற்றின் நெருக்குதலில்
சிறகு தொலைத்த
பறவை
இமை மூடி
வானம் பார்த்து
வானம் பார்த்து
3
பல வண்ணப் பூக்கள்
தளும்பிய சாடி
காலி செய்யப்பட்டது
பூவற்ற வெறுமையில்
நொறுங்கி
விழுகிறது.
விழுகிறது.
- யுவபாரதி