Showing posts with label நாகன். Show all posts
Showing posts with label நாகன். Show all posts

April 30, 2017

பரீட்சித்து

ஏழுலகின் வணக்கத்துக்கும்
உரிய மாமன்னன் நான்
இந்நிட்டைமுனி மட்டும் ஏன்
காணமறுக்கிறான்
நிட்டை கலைத்த
மறுநாள் வந்து
நிதானமாய்க் கேட்டிருக்கலாம்
செத்த பாம்பொன்றை 
ஏனவன் கழுத்திலிட்டாய் பரீட்சித்து

ஏழுகடல் ஏழுமலை தாண்டி
உச்சாணி மண்டபத்தில்
பாகவதம் கேட்டாலும்
நீ உண்ணும் பழத்தில்
புழுவாய் வந்திருக்கிறான்
நாகன்.

29.01.2017