காஞ்சிபுரம் இலக்கியக் களம் சார்பில் 22/01/2010 ஞாயிறன்று காஞ்சிபுரம் பூமாலை வளாகத்தில் "க.நா.சுப்பிரமண்யம் நூற்றாண்டு கருத்தரங்கம்" நடைபெற்றது. காஞ்சி சு.சிவசங்கர் தலைமையேற்று நடத்திய இந்நிகழ்விற்கு வந்தவர்களை எஸ்.உஷாராணி வரவேற்றார். எழுத்தாளர் செந்தூரம் ஜெகதீஷ் "க.நா.சு. ஒரு இலக்கியப் பார்வை" என்ற தலைப்பிலும், எழுத்தாளர் சூர்யராஜன் "க.நா.சு. ஒரு இலக்கிய ஆளுமை" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். கே.உதயகுமார் நன்றி கூறினார்.
Showing posts with label இலக்கியக் களம். Show all posts
Showing posts with label இலக்கியக் களம். Show all posts
January 22, 2012
காஞ்சி இலக்கியக் களம் நடத்திய க.நா.சு. நூற்றாண்டு கருத்தரங்கம் - ஒலிப்பதிவு
காஞ்சிபுரம் இலக்கியக் களம் சார்பில் 22/01/2010 ஞாயிறன்று காஞ்சிபுரம் பூமாலை வளாகத்தில் "க.நா.சுப்பிரமண்யம் நூற்றாண்டு கருத்தரங்கம்" நடைபெற்றது. காஞ்சி சு.சிவசங்கர் தலைமையேற்று நடத்திய இந்நிகழ்விற்கு வந்தவர்களை எஸ்.உஷாராணி வரவேற்றார். எழுத்தாளர் செந்தூரம் ஜெகதீஷ் "க.நா.சு. ஒரு இலக்கியப் பார்வை" என்ற தலைப்பிலும், எழுத்தாளர் சூர்யராஜன் "க.நா.சு. ஒரு இலக்கிய ஆளுமை" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். கே.உதயகுமார் நன்றி கூறினார்.October 05, 2011
காஞ்சிபுரம் : இலக்கியக் களம் நடத்திய கருத்தரங்கம் - ஒலிப்பதிவு
| அமுதகீதன், யாழன் ஆதி, அமிர்தம்சூர்யா, குட்டிரேவதி |
முதலில் பேசிய கவிஞர் யாழன் ஆதி"தலித்தியக் கவிதைகள் : அழகியல் - அரசியல்" என்ற தலைப்பில், தலித் அரசியலின் கடந்த கால வரலாறு, 90களில் தலித்தியச் சிந்தனை தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்திய தாக்கம், அம்பேத்கரியத் தத்துவ நிலைப்பாடுகளின் அடியொற்றி தலித்திய எழுத்துகள் பயணிக்க வேண்டியுள்ள கடப்பாடு ஆகியவற்றைப் பற்றிப் பேசினார்.
"இரண்டாயிரத்துக்குப் பின் தமிழ்க்கவிதை பகட்டு வெளிப் பறத்தலும் இருட்டைத் தோண்டி எடுத்தலும்" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கிய கவிஞரும் கல்கி வார இதழின் உதவி ஆசிரியருமான அமிர்தம் சூர்யா நவீன கவிதைகள் புரிந்து கொள்ளக் கடினமாக உள்ளன என எழும் வழக்கமான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் முகமாக அவற்றின் மொழிப் பயன்பாடு மற்றும் குறியீட்டுத் தன்மை ஆகியவற்றை விளக்கியதோடு, வாசிப்பிற்கு அது வாசகனிடம் எதிர்பார்க்கிற எத்தனங்களின் உள்ளீடு குறித்துப் பேசினார்.
"உடலை வாசித்தலும் எழுதுதலும்" என்ற தலைப்பில் கவிஞர் குட்டிரேவதி கருத்துரைத்தார். பெண்ணியம் மற்றும் தலித்தியம் சார்ந்த சமகாலப் படைப்புகளில் உடலரசியலின் முக்கியத்துவம் பற்றியும் பாலுறவு வேட்கையை எழுதுவது மற்றுமே உடலரசியல் ஆகாது என்றும் குறிப்பிட்டார்.
ஒலிப்பதிவு : யுவபாரதி
October 03, 2011
காஞ்சிபுரம் : ம.பொ.சி. குறித்த கருத்தரங்கம் - ஒலிப்பதிவு
![]() |
| ம.பொ.சி. |
இந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.
mp3 வடிவில்...
ஒலிப்பதிவு - யுவபாரதி
February 15, 2011
மொழி திரியும் கவிதைவெளியில் திசைமுகம் தேடல்
| அமுதகீதன், யாழன் ஆதி, அமிர்தம் சூர்யா, குட்டி ரேவதி |
முதலில் பேசிய கவிஞர் யாழன் ஆதி "தலித்தியக் கவிதைகள் : அழகியல் - அரசியல்" என்ற தலைப்பில், தலித் அரசியலின் கடந்த கால வரலாறு, 90களில் தலித்தியச் சிந்தனை தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்திய தாக்கம், அம்பேத்கரியத் தத்துவ நிலைப்பாடுகளின் அடியொற்றி தலித்திய எழுத்துகள் பயணிக்க வேண்டியுள்ள கடப்பாடு ஆகியவற்றைப் பற்றிப் பேசினார்.
"இரண்டாயிரத்துக்குப் பின் தமிழ்க்கவிதை பகட்டு வெளிப் பறத்தலும் இருட்டைத் தோண்டி எடுத்தலும்" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கிய கவிஞரும் கல்கி வார இதழின் உதவி ஆசிரியருமான அமிர்தம் சூர்யா நவீன கவிதைகள் புரிந்து கொள்ளக் கடினமாக உள்ளன என எழும் வழக்கமான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் முகமாக அவற்றின் மொழிப் பயன்பாடு மற்றும் குறியீட்டுத் தன்மை ஆகியவற்றை விளக்கியதோடு, வாசிப்பிற்கு அது வாசகனிடம் எதிர்பார்க்கிற எத்தனங்களின் உள்ளீடு குறித்துப் பேசினார்.
"உடலை வாசித்தலும் எழுதுதலும்" என்ற தலைப்பில் கவிஞர் குட்டிரேவதி கருத்துரைத்தார். பெண்ணியம் மற்றும் தலித்தியம் சார்ந்த சமகாலப் படைப்புகளில் உடலரசியலின் முக்கியத்துவம் பற்றியும் பாலுறவு வேட்கையை எழுதுவது மற்றுமே உடலரசியல் ஆகாது என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தமும் கவிஞர் அமுதகீதனும் செய்திருந்தனர்.
- யுவபாரதி
December 06, 2010
காஞ்சி இலக்கியக் களம் - முதல் கூட்டம்
கடந்த டிசம்பர் 5, ஞாயிறு அன்று இலக்கியக் களம் அமைப்பின் முதல் கூட்டம் காஞ்சீபுரத்தில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்றது. ருஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் நூற்றாண்டு நினைவு நாள் மற்றும் காஞ்சீபுரம் இலக்கிய வட்டம் வெ. நாராயணனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் ஆகியவற்றை முன்னிட்டு இருவரது புகைப்படங்களும் திறந்து வைக்கப்பட்டன.இக்கூட்டத்திற்கு எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தம் அவர்கள் தலைமை வகித்தார். பாரதி விஜயன் வரவேற்றார். கவிஞர் அமுதகீதன் இலக்கியக் களம் அமைப்பின் நோக்கங்களைக் கூறினார். டாக்டர் சீனிவாசன், வெ. நாராயணனைப் பற்றியும் காஞ்சி அண்ணல் டால்ஸ்டாய் பற்றியும் பேசினர்.
எழுத்தாளர் இராசேந்திரச் சோழன் டால்ஸ்டாய் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். இலக்கியக் களம் அடுத்து நடத்த இருக்கும் ம.பொ.சி. குறித்த கூட்டம் பற்றி காஞ்சி அமுதன் பேசினார். கவிஞர் அமுதகீதன் நன்றியுரை ஆற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
Subscribe to:
Posts (Atom)
