என்னை
நிலவறைக்குள் தள்ளிப் பூட்டி
அவ்வப்போது குரல் கொடுக்கிறாய்
தொலைத்துவிட்ட திறவுகோலை
எப்போதேனும் தேடுகிறாய்
தரைமேல் நிகழும்
மிகுநடையை கூக்குரலை
அதிர்வுகளாய் உணர்கிறது செவி
இருள் பழகிவிட்டதால்
கண்களுக்கு மிரட்சியில்லை
உடல் அழுக்கில் புதைந்து
தாடியும் சிக்குப் பிடித்துவிட்டது
- யுவபாரதி
நிலவறைக்குள் தள்ளிப் பூட்டி
அவ்வப்போது குரல் கொடுக்கிறாய்
தொலைத்துவிட்ட திறவுகோலை
எப்போதேனும் தேடுகிறாய்
மிகுநடையை கூக்குரலை
அதிர்வுகளாய் உணர்கிறது செவி
இருள் பழகிவிட்டதால்
கண்களுக்கு மிரட்சியில்லை
உடல் அழுக்கில் புதைந்து
தாடியும் சிக்குப் பிடித்துவிட்டது
- யுவபாரதி