முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
Showing posts with label
காதல்
.
Show all posts
Showing posts with label
காதல்
.
Show all posts
January 27, 2013
எப்போதோ எழுதிய கவிதை : 11
காலில் காயம்
வெளியில் செல்வதே இல்லை
என்கிறாய்
என்
இதயத்திற்குள் மட்டும்
எப்படி வருகிறாய்?
-
யுவபாரதி
எப்போதோ எழுதிய கவிதை : 10
மௌன மேகம்
கலை
இதயவானில்
நட்சத்திரங்கள்
பூக்கட்டும்.
-
யுவபாரதி
எப்போதோ எழுதிய கவிதை : 9
மௌனம் சுமக்கிறாய்
கதறுகிறேன்
பேசத் துவங்குகிறாய்
ஊமையாகிறேன்.
-
யுவபாரதி
எப்போதோ எழுதிய கவிதை : 8
உன் மௌனத்தில்
என் வார்த்தை
கவிதையாகிறது
உன் புன்னகையில்
நானே
கவிதையாகிறேன்.
-
யுவபாரதி
January 26, 2013
எப்போதோ எழுதிய கவிதை : 7
விழுதுகளை இறைக்கிறேன்
கவிஞன் என்கிறாய்
உன் மௌனத்தில்
புதைந்திருக்கிறது
என் ஆலவிதை.
-
யுவபாரதி
எப்போதோ எழுதிய கவிதை : 6
உதாசீனம் செய்கிறாய்
வெட்கமற்றது
என் மனம்
உன்னையே தியானிக்கிறது.
- யுவபாரதி
January 25, 2013
எப்போதோ எழுதிய கவிதை : 5
சித்ரவதை
உன் மௌனம்
பேசிக் கொன்றுவிடு.
-
யுவபாரதி
எப்போதோ எழுதிய கவிதை : 4
ஒவ்வொரு இரவிலும்
உனக்கெனச் சேகரிக்கிற
வார்த்தைகள்
விடியலில் சிவந்துவிடுகின்றன
அத்திப்பழமெனக்
கவ்விச் செல்கின்றன
கிளிகள்.
-
யுவபாரதி
எப்போதோ எழுதிய கவிதை : 3
பேச எத்தனிக்கிறேன்
வெயில் விலகாமல்
மழைத் தூறல்
நம் வார்த்தைகளைக்
கற்பிதம் செய்கிறது
வானம்.
-
யுவபாரதி
January 24, 2013
எப்போதோ எழுதிய கவிதை : 2
ஓட்டமும் நடையுமாய்
என் நோக்கி ஓடிவரும்
அம்மா அழைத்ததும்
கைவிட்டு ஓடிப்போகும்
எதிர்வீட்டுக் குழந்தை
உன்னை நினைவூட்டுகிறது.
-
யுவபாரதி
எப்போதோ எழுதிய கவிதை : 1
இங்கு சாதி இல்லை
உனக்குச் சகோதரி இல்லை
அப்பா பயம் இல்லவே இல்லை
என இருந்திருந்தால்
நாம் இருந்திருப்போம்.
-
யுவபாரதி
November 16, 2012
அயல் வானம்
1
அப்போது பறவைக்குச்
சிறகுகள் இருந்தன
குச்சிகளாலான கூட்டிற்குக்
கதவுகளும் இல்லை
உறவாக ஒரு வானம்
இருந்தது.
2
விண்ணுரசி வீழ்ந்ததும்
பதறியெடுத்த விரல்களில்
கண்ணயர்ந்தது.
3
விழித்ததும்
சிறகுகளின் இடத்தில்
அதே வண்ணத்தில்
கோடுகள் இருந்தன
கம்பிகளாலான
கதவுகள் தெரிந்தன
வானம்
அயலாகிப் போனது.
-
யுவபாரதி
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)